;
Athirady Tamil News

கிழக்கு லண்டனில் புகையுடன் கூடிய பெரும் தீ! போராடிய தீயணைப்பு வீரர்கள்

0

இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் நகரில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை எதிர்த்து தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பாரிய தீ விபத்து
செவ்வாய்கிழமை காலை கிழக்கு லண்டனில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. தீ விபத்தினால் உண்டான கரும் புகை மேகங்கள் வானில் பரவியது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 10 வாகனங்கள், 70 பணியாளர்களுடன் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு படையினர்
10 மாடிகளைக் கொண்ட வணிகப் பிரிவின் தரை தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

மீட்பு முயற்சியில் நபர் காயங்கள் இன்றி வெளியேற்றப்பட்டார். பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தற்போது வரை தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. எனினும் விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.