;
Athirady Tamil News

ஆந்திராவில் மாறிய ஆட்சி! சந்திரபாபு நாயுடு-விற்கு TVK தலைவர் விஜய் வாழ்த்து

0

ஆந்திராவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு க்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் மாறும் ஆட்சி
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் தனது கூட்டணி ஆட்சியை உறுதி செய்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் தலைமையின் கீழ் உள்ள தெலுங்கு தேசம் கட்சி 130 தொகுதிகளிலும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

நடிகர் விஜய் வாழ்த்து
இந்நிலையில் ஆந்திராவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் மற்றும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த தெலுங்கு தேசம் கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கும் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உங்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.