;
Athirady Tamil News

கனடாவில் கடையை உடைத்து சாக்லெட் சன்டே தயாரித்த நபர்

0

கனடாவில் ஐஸ்கிறீம் கடையொன்றை உடைத்து சாக்லெட் சன்டே தயாரித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் கெலெவ்னாவில் இந்த விநோத சம்பவம் பதிவாகியுள்ளது.

கடையின் முன் பக்க கதவை உடைத்து உட் பிரவேசித்த நபர் இவ்வாறு சாக்லெட் சன்டே தயாரித்துள்ளார்.

கதவை உடைத்து உள்ளே பிரவேசித்த போது கடையின் பாதுகாப்பு அலாரம் இயங்கிய காரணத்தினால் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பொலிஸார் கடையுனுள் பிரவேசித்த போது நபர் ஒருவர் சாக்லெட் சன்டே தயாரித்துக் கொண்டிருப்பதனை கண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அதிகாலை 4.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேக நபர் பணத்தை கொள்ளையிடும் நோக்கில் கடையை உடைத்ததாக தென்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஐஸ் கிறீம் வகைகளை திருடும் நோக்கில் கடையை உடைத்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.