;
Athirady Tamil News

நிலவின் இருண்ட பகுதியில் இருந்து 2 கிலோ மண்ணை எடுத்த சீனா

0

சீனாவின் Chang’e-6 விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது.

சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Chang’e-6 நிலவு லேண்டரை விண்ணில் செலுத்தியது.

தற்போது இந்த மூன் லேண்டர் நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தகவலை சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேகரிக்கப்பட்ட 2 கிலோ மண் மாதிரியை வெற்றிகரமாக மூப்பிக்கு கொண்டுவரும் பணியை செய்து முடித்தால், அவ்வாறு செய்யும் முதல் நாடாக சீனா மாறும்.

நிலவின் தெற்குப் பகுதியில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரிக்க, மூன் லேண்டரில் ஒரு இயந்திரக் கை பொருத்தப்பட்டு, துளையிட்டு, தோண்டிய பின் மண் எடுக்க வேண்டும்.

இந்த மாதிரியை ஆய்வு செய்வதன் மூலம், சந்திரன், பூமி மற்றும் சூரிய குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி தொடர்பான தடயங்களை விண்வெளி விஞ்ஞானிகள் பெற முடியும் என்று சீனாவின் விண்வெளி நிறுவனமான தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தரவு சீனாவின் வரவிருக்கும் நிலவு பயணங்களிலும் பயன்படுத்தப்படும்.

சந்திரனின் தெற்குப் பகுதியில் முதன்முறையாக சீனக் கொடி
சந்திரனில் இருந்து மண்ணை சேகரித்த பிறகு, Chang’e-6 முதல் முறையாக நிலவின் தெற்குப் பகுதியில் சீனக் கொடியை ஏற்றியது. இப்போது அதன் பணியை முடித்துவிட்டு, மூன் லேண்டர் Chang’e-6 திரும்பி வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலவில் இருந்து புறப்பட்ட Chang’e-6 ஜூன் 25 (செவ்வாய்க்கிழமை) சீனாவின் உள் மங்கோலியா பகுதியின் பாலைவனத்தில் தரையிறங்கும் என சீன விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.

இதுவே சீனாவின் நிலவு பயணங்களில் மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. ஜூன் 25-ஆம் திகதி சீனாவின் நிலவு லேண்டர் வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கினால், அது சீனாவிற்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு பெரிய சாதனையாக இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.