;
Athirady Tamil News

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

0

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.

வெற்றி கொண்டாட்டம்
இதன்போது, கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன.

பின்னர் பொதுமக்களுக்கு மோதகம் ,லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடியுள்ளனர்.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.