;
Athirady Tamil News

சிவசிதம்பரத்தின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்

0

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரததின் சிலையடியில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தலில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் இந்தியாவில் சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டார்.

முருகேசு சிவசிதம்பரம் (ஜுலை 20, 1923 – ஜுன் 5, 2002) இலங்கைத் தமிழ் அரசியலில் நீண்டகாலம் செயற்பட்டதுடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் ஆவர் . நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968 முதல் 1970 வரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.