;
Athirady Tamil News

யாழில். கஞ்சாவுடன் மூவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , மூன்று இளைஞர்களை சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து,190 மில்லிகிராம், 120 மில்லிகிராம் மற்றும் 80 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மூவரையும் கைது செய்து கோப்பாய் பொலிஸார் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.