;
Athirady Tamil News

மதிய உணவுப் பொதி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

0

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்(Harshana Rukshan) தெரிவித்துள்ளார்.

குறைக்கப்படும் விலை
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, மதிய உணவுப் பொதி மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய சிற்றுண்டிப் பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.