;
Athirady Tamil News

மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி : 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

0

நேருக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகிய பெருமையை பெற்ற நரேந்திர மோடிக்காக அரசு வைத்தியசாலையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது.

தங்க மோதிரம் அணிவித்த பாஜக
இந்தியாவில் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் மோடியின் பாஜக கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே பிரதமாரக இருக்கும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகியுள்ளார். நேருக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகிய பெருமையை பெற்ற ஒரே பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெருகிறார்.

இதை கொண்டாடும் விதமாக திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பாஜக குழுவினர் பரிசாக வழங்கியுள்ளனர்.

மேலும் இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.