;
Athirady Tamil News

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கை

0

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நாட்டின் நீர் விநியோக வலையமைப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை(nwsdb) தெரிவித்துள்ளது.

அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மின் விநியோகத் தடைகள் போன்ற ஏனைய பிரச்சினைகளினால் நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய நிலை
கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பெருக்கெடுத்து, வெள்ள அபாய நிலை ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நீர்நிலைகளை அண்டிய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான காரியலையங்களில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.