;
Athirady Tamil News

இன்று முதல் உயர் தர வகுப்புகள் உடனடி ஆரம்பம்

0

அமைச்சரவையின் அங்கீகாரத்தை தொடர்ந்து, க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்புகள் இன்று(06) ஆரம்பமாகவுள்ளன.

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு மே 14 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உயர் தர வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்னரான காலப்பகுதியானது மாணவர்களின் கல்வியை தொடர்வதற்கான நாட்டம் குறைவதற்கு காரணமாக அமைவதுடன் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கும் பங்களிக்கிறது.

உடனடி ஆரம்பம்
இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, 2024 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர் தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.

அத்துடன், இந்த தீர்மானமானது, மாணவர்களின் நேரத்தை மிகவும் திறம்பட நிர்வகிப்பதற்கும் ஆசிரியர்களுக்கு போதுமான நேரத்தை வழங்குவதற்கும் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.