;
Athirady Tamil News

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் பாய்ந்த பொலிஸ் ஜீப் ; நாடாளுமன்றில் சாள்ஸ் எம்.பி அம்பலப்படுத்திய உண்மை

0

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடி போதையில் பொலிஸ் அதிகாரிகள்
குறித்த சம்வம் தொடர்பில் இன்று (2024.06.06) நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில்,

அந்த பொலிஸ் வாகனத்தில் இருந்த 6 பொலிஸ் அதிகாரிகளும் குடி போதையில் வாகனம் செலுத்தியதாகவும் இந்த விடயத்தை பொலிஸார் வீதி விபத்து என பதவிட்டுள்ளனர்.

குறித்த 6 பொலிஸ் உத்தியோகத்தோர்களையும் பணி நீக்கம் செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.