;
Athirady Tamil News

இரண்டே வாரங்களில் நிரப்பப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள்: வெளியானது அறிவிப்பு

0

தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழிநுட்பம், கணிதம் போன்ற துறைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அறிவித்துள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்களின்
இதன்படி தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை நிரப்பப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 8000 எனவும், மாகாண மட்டத்தில் 6000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.