;
Athirady Tamil News

யாழில் உணவு கையாளும் நிலையமொன்றிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

யாழ்ப்பாணம் (Jaffna) ஏழாலை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு கையாளும் நிலையத்தினை நடாத்திய உரிமையாருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று, உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது.

ஏழாலை பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பரிசோதனையில், சுகாதாரமற்ற முறையில், சுகாதார சீர்கேட்டுடன் உணவு கையாளும் நிலையம் இயங்கி வந்த நிலையில், அதன் உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் (06.06.2024) வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் முன்னிலையான உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று, உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்தது.

விதிக்கப்பட்ட தண்டம்
அதேவேளை, கடந்த வாரம் சுன்னாகம் பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையம் ஒன்றில் காலாவதியான மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்த கூடிய, உண்பதற்கு ஒவ்வாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக உரிமையாளருக்கு 83 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.