;
Athirady Tamil News

பால், அரிசி மட்டும் போதாது! 4ல் 1 குழந்தை பசியால் பாதிப்பு என ஐ.நா தகவல்

0

உலக அளவில், ஒவ்வொரு நான்கு சிறு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு, அவர்களின் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பைக் பாதிக்கும் வகையில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறை உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த “கடுமையான உணவு பற்றாக்குறை” ஐக்கிய நாடுகள் அவை ஏற்கனவே பஞ்ச பாதிப்பு மண்டலங்களாக அறிவித்துள்ள பாலஸ்தீன், ஹெய்டி மற்றும் மாலி போன்ற பகுதிகளில் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த பிராந்தியங்கள் வரும் மாதங்களில் மேலும் மோசமான உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்திற்கு உட்பட்ட குழந்தைகளின் உணவு முறைகளை குறிப்பாக மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப்பால்(UNICEF) வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில் கவலைப்படும் உணவு முறைகள் காணப்பட்டன.

கிட்டத்தட்ட 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 181 மில்லியன் குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு உணவுக்குழுக்களை மட்டுமே உட்கொள்கின்றன.

அவை பொதுவாக அரிசி, சோளம் அல்லது கோதுமை போன்ற ஸ்டார்ச் உணவுடன் பால் உள்ளடக்கியவையாக இருக்கும்.

இந்த பல்வகைமையின்மை “கடுமையான உணவு பற்றாக்குறை” என்ற வரையறைக்குட்பட்டது மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வுக்கு திரும்பப் பெற முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று யுனிசெப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் கூறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.