;
Athirady Tamil News

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள் : விசாரணையில் வெளியான தகவல்

0

பாடசாலையில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் மயங்கி விழுந்து பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வரும் போது போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இருபத்தொரு வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் ஆறு வயது மாணவனும், ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் வெளியான தகவல்

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதியத்தலாவ, கெஹெல் உல்ல பிரதேசத்தில் வசிக்கும் இளைஞராவார்.

குறித்த மாணவர்களும் பாடசாலைக்கு வரும்போது இந்த சந்தேகநபர், இருவருக்கு இவற்றைக் கொடுத்த பின்னர், அவர்கள் பாடசாலைக்கு வந்து அவற்றை சாப்பிட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இது குறித்து பாடசாலை அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.