;
Athirady Tamil News

போதை மாத்திரைகளை உட்கொண்ட 2 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

0

அம்பாறை(Ampara) – பதியத்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட இரு மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்தச் சந்தேகத்தின் அடிப்படையில் பதியத்தலாவ, கெஹெல் உல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞனொருவரை கைது செய்யதுள்ளனர்.

பொலிஸ் விசாரணை
சம்பவத்தில், பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் 6 வயது மாணவனும் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 11 வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களும் சகோதரர்கள் என்பதுடன் கைதான இளைஞனே அவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இரு மாணவர்களும் கைதான இளைஞன் வழங்கிய போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதுடன் மயங்கி வீழ்ந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.