;
Athirady Tamil News

மனித இனத்தைக் காப்பாற்ற கடவுளால் அனுப்பப்பட்டவர் புடின்: ரஷ்யா வெளியிட்டுள்ள வீடியோ

0

உக்ரைனில் ரஷ்ய வீர்ரகள் பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று, மூன்றாம் உலகப்போரிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றுவதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர்தான் புடின் என்கிறது!

சொல்பவர் அணிகுண்டு வீசச்சொன்னவர்…
புடினுடைய வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான பேராசிரியர் Sergei Karaganov (71) என்பவர், மூன்றாம் உலகப்போரிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றுவதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர்தான் புடின் என்று கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விடயம் என்னவென்றால், கடந்த ஆண்டு, மேற்கத்திய நாடுகளின் மனோபலத்தை நொறுக்க அணுகுண்டு வீசவேண்டும் என்று கூறியவர்தான் இந்த Karaganov.

காப்பாற்ற கடவுளால் அனுப்பப்பட்டவர் புடின்
1998,99 காலகட்டத்தில், எங்கள் நாடு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோது, நம்பிக்கையிழந்திருந்தோம் நாங்கள். அப்போது கடவுள் எங்கள் மீது இரக்கம் காட்டியதால் புடின் வந்தார்.

இப்போதும், புடினுக்கு கடினமான ஒரு இலக்கு இருக்கிறது. அது வெற்றி பெறுவது மட்டுமல்ல, மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் உலகை காப்பாற்றுவதும் அவருக்கு அளிக்கப்பட்ட இலக்கு ஆகும் என்கிறார் Karaganov.

அத்துடன் அவர் நிறுத்தவில்லை, உலகில் நடக்கும் மோசமான விடயங்களுக்கெல்லாம் பிரித்தானியாவும் அமெரிக்காவும்தான் காரணம் என்றும் கூறியுள்ளார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.