;
Athirady Tamil News

அரச பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தர்… நேர்ந்த பெரும் சோகம்!

0

பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்து மோதி பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபர் பதுளை நகரில் நாளாந்தம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினமான நேற்று (08-06-2024) மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​பண்டாரவளை டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நகரை வந்தடைந்த பேருந்து பதுளை பிரதான பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் பிரவேசித்த போது பேருந்தின் முன் இடது சக்கரத்தில் அவர் சிக்கியதையடுத்து அங்கிருந்த மக்கள் அவரை பெரும் பிரயத்தனப்பட்டு வெளியே எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பேருந்தில் மோதுண்டு பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​அவரது கால்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும், இரு கால்களும் உடலில் இருந்து விலகி தொங்கியதாகவும் அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.