;
Athirady Tamil News

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்பு!

0

நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மோடியை தொடர்ந்து கேபிநட் அமைச்சர்களாக 30 பேர் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் மோடியை தொடர்ந்து அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.