;
Athirady Tamil News

வத்தளை – எந்தரேமுல்லயில் மற்றுமொரு விபத்து : ஒருவர் படுகாயம்

0

வத்தளை – எந்தரேமுல்ல தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று(09.06.2024) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதி சிகிச்சைக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியில் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை காலையும் இரு தொடருந்துகளுடன் கார் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.