;
Athirady Tamil News

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் அறிமுகமாகும் புதிய பெட்ரோல் வகை

0

சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (Lanka IOC)எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இலங்கைக்கு புதிய வகை எரிபொருளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறித்த எரிபொருள் வகை எக்ஸ்பி 100 ஆக்டேன் பெட்ரோல் என கூறப்படுகிறது.

இந்திய தயாரிப்பு
இந்த நிலையில், நாரஹேன்பிட்டி மற்றும் தும்முல்லை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து புதிய பெட்ரோலின் அறிமுகத்தை ஆரம்பிக்க நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய நிறுவனம்
அத்துடன், யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா நிறுவனம் (United Petroleum Australia) ஜூலை இறுதி அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இந்த அவுஸ்திரேலிய நிறுவனமும் தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இக்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.