;
Athirady Tamil News

அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : நாமல் அதிரடி அறிவிப்பு

0

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிட நான் தயார் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) செயற்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

குறித்த விடயமானது கடந்த 07 ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ உடன்பாடு எட்டப்படவில்லை என்பதுடன் எவரும் எதிர்த்ததாக தெரிவிக்கப்படவில்லை.

அதிபர் தேர்தல்
அத்தோடு, அக்கட்சியின் தேசிய அழைப்பாளராக ரோஹித அபேகுணவர்தனவின் (Rohitha Abeygunawardena) பெயரையும் நாமல் ராஜபக்ச முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், எவ்வித தயக்கமும் இன்றி பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மற்றும் நாமல் ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் குழப்பம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.