;
Athirady Tamil News

அரசியல்வாதியால் சுயநினைவின்றி அதிதீவிர சிகிற்சை பிரிவில் இளைஞர்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு கார் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மன குழப்பத்தில் தந்தை
குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தினை எதிர்கொண்டார்.

அப்போது நளீன் பண்டார கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வட்டுப்பிட்டிவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், சுயநினைவின்றி இருக்கும் இளைஞனின் உயிர் இயந்திரங்களினால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திஹாரிய, கல்கெடிஹேனே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்ற இளைஞனே விபத்தில் சிக்கியவராவார்.

தாயாரை இழந்த இளை ஞர் மோட்டார் சைக்கிள் விற்பனை ஈடுபடுபவர் என கூறப்படும் நிலையில் , அவரது தந்தை தற்போது மன குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.