;
Athirady Tamil News

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க, கலந்து கொண்டுள்ளார்.

அதன்போது ராஷ்டிரபதி பவனில் இருவரும் சந்தித்துப் பேசியபோது, ​​இலங்கைக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியப் பிரதமரின் வருகை
மேலும், டெல்லியில்(Delhi) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பிரதமர் மோடியின் பயணம் குறித்து விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது இந்த விஜயம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என தெரியவந்துள்ளது.

அதிபர் ரணிலிடம்(Ranil Wikremesinghe), விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து, இந்தியப் பிரதமரின் விஜயம் குறித்து ஆராய்வதாக ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.