;
Athirady Tamil News

இனி வாழ்க்கையில்….செய்தியாளர்களை சந்திக்கமாட்டேன்!! அதிரடி முடிவெடுத்த அண்ணாமலை

0

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிரடியான அறிவிப்பு ஒன்றை தற்போது கூறியுள்ளார்.

அண்ணாமலை
தமிழக அரசியலில் அழுத்தமான ஒரு அரசியல்வாதியாக மாறி வருகின்றார் அண்ணாமலை. அதற்கு முக்கிய காரணம், அவர் அளிக்கும் பேட்டிகள் தான்.

schedule செய்யாமல் விமான நிலையம், கட்சி மீட்டிங் போகும் இடங்கள் என பல இடத்திலும் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்து செல்கிறார் அண்ணாமலை.

அது பல சமயங்களில் தலைப்பு செய்தியாகவே மாறியுள்ளது. இந்நிலையில் தான், தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

வாழக்கையில்…
அதாவது, இனிமே பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டுமே முன்னரே தகவல் தெரிவித்த பிறகே பிரஸ்மீட் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதுவும் குறிப்பாக இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்கவே மாட்டேன் என உறுதியாக தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

தான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள் என கூறி, பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும் சந்திப்பு இருக்கும் என்று தெரிவித்து இதை முறைபடுத்த போகின்றோம் என்றும் தகவல் அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.