;
Athirady Tamil News

உடல் ரீதியான உறவுக்கு மறுத்த 63 வயது நபர்! அடித்து கொன்ற 2 இளம்பெண்கள்

0

ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் நகரில் இரண்டு பெண்கள் கொலை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு பெண்கள் கைது
ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல்(Stavropol) நகரில் ரோசா (29) மற்றும் மார்த்தா (37) என்ற இரண்டு பெண்கள் 63 வயதான அலெக்சாண்டர் என்ற நபரை தங்களுடன் உடல் ரீதியான உறவு வைத்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு அலெக்சாண்டர் மறுப்பு தெரிவிக்கவே அவரை அந்த இரண்டு பெண்களும் அடித்து கொன்றுள்ளனர்.

ரஷ்யாவின் விசாரணை கமிட்டி தெரிவித்துள்ள தகவலின் படி, அலெக்சாண்டரின் கை, கால்கள் அடித்து உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஸ்டாவ்ரோபோலில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மூவரும் மது அருந்திய பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலையை மறைக்க முயற்சி
கொலை செய்த பின்னர் தடயங்களை மறைக்க முயன்றதாக விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்காக உயிரிழந்த அலெக்சாண்டரின் உடலை காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று மறைத்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் நடந்த இடத்திற்கு சந்தேகிக்கப்படும் பெண் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு, போலி பொம்மையைக் கொண்டு காட்சிகள் மறுபடைப்பு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.