;
Athirady Tamil News

குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!

0

இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த முன்மொழிவு தொடர்பான பொது கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.

மின்கட்டணத்தை குறைக்க திட்டம்

இதனையடுத்து ஜூலை 01 முதல் மின்கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.