;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கு செலவிடப்பட்டுள்ள நிதி: வெளியாகியுள்ள தகவல்

0

அரசாங்கத்தின் அன்றாடச் செலவுகளுக்கு 2023ல் 4.3 டிரில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக பந்துல குணவர்தன (Bandula Gunawardane)தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் அன்றாட செயற்பாடுகள், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற நலன்புரி கொடுப்பனவுகள், கடன்களுக்கான வட்டி செலவுகள் என்பவற்றைச் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதிபர் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம்
எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை வழிநடத்தினாலும், அவர்கள் 2028 வரை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஏற்படுத்திக்கொண்ட கடன் ஒப்பந்தங்களைப் பேண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டளவில், வெளிநாட்டு வள இடைவெளி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு போதுமானதாக இருக்காது என்றும், கடந்த வருட அனுபவத்தின் அடிப்படையில் அதற்காக 5018 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனை எதிர்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் 663 மில்லியன் டொலர்களை நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்க இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம்
அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் எந்த அரசாங்கமும் இந்த நிதியை ஈடுசெய்ய வேண்டியிருக்கும், இதற்காக சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கும் இணங்கியுள்ளன.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுவழி
அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நிதியமைச்சராக உள்ள நிலையில், இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் செயல்பட எதிர்பார்க்கப்படும் தரப்பினர்கள் இதனை சரியாக செயற்படுத்துவார்களா என்பதையும் நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்காதவர்களால் நாட்டின் எதிர்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வேறு மாற்றுவழி கிடையாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.