;
Athirady Tamil News

அநுராதபுரம் பாடசாலையில் உணவு ஒவ்வாமை: மாணவர்கள் பலர் பாதிப்பு

0

அநுராதபுரம் (Anuradhapura) பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், அநுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3இல் கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

உணவு ஒவ்வாமை
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நெத்தலி கருவாடு, வெண்டைக்காய் மற்றும் முருங்கைக் கீரை உள்ளிட்ட உணவு வகைகளை உட்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் அனைவரும் சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.