;
Athirady Tamil News

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இது தொடர்பான குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை பத்திரம்
இந்த நிலையில், குறித்த கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் (14) அன்று கிடைக்கப்பெற உள்ளதாகவும் மற்றும் அந்த அறிக்கை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கேற்ப கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.