;
Athirady Tamil News

ஒன்பது வயது சிறுமி மீது தாக்குதல்:நாட்டில் அதிகரிக்கும் கொடூர சம்பவம்

0

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது. சிறுமியை தாக்கிய சந்தேக நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேகநபரின் பகையாளர்களுடன் சிறுமி உரையாடியுள்ளார்.

மேலதிக விசாரணை

இதனையடுத்து உரையாடியதை சிறுமி மறைத்தமையால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் 04 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.