;
Athirady Tamil News

யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

0

தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

துண்டு பிரசுர விநியோகத்தை பின்னர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவிக்கையில்,

நாட்டை கட்டி எழுப்புவது எவ்வாறு என மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

உணர்வு சார்ந்த அரசியலை முன்னெடுத்து, அரசியல் இருப்புகளை தக்க வைப்பது அரசியல்வாதிகளுக்கு இலகுவான ஒன்று. இம்முறை உணர்வு சார்ந்த அரசியல்களை தவிர்த்து அறிவு சார்ந்த அரசியலை செயல்படுத்துவது தமிழ் சிங்களமாகிய இரண்டு இனங்களுக்கும் தேவையான ஒன்று என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.