;
Athirady Tamil News

நிராகரிக்கப்பட்ட ரணிலின் தீர்மானம்: முடிவடையும் சட்டமா அதிபரின் பதவிக்காலம்

0

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலத்தை நீடிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, இன்று (18) பிற்பகல் அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா (Mahinda Yapa Abeywardena) அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது, அதிபரின் பரிந்துரை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது.

ரணிலின் யோசனை
வாக்கெடுப்பின் போது, குறித்த யோசனைக்கு எதிராக 05 வாக்குகளும், ஆதரவாக 03 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை அதிபர் ரணில் அண்மையில் அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பித்தார்.

பதவிக்காலம்
அதனையடுத்து, அரசியலமைப்பு பேரவை இரண்டு தடவைகள் கூடியதுடன் இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமா அதிபர், அதிபர் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.