;
Athirady Tamil News

சுதந்திர கட்சியிலிருந்தும் சஜித்தை நோக்கி ஓடும் பிரமுகர்கள்

0

முன்னாள் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி(Lionel Premasiri) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(sajith peremadasa) ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டார்.

காலி மகிந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தொழில் ரீதியாக சட்டத்தரணியாவார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலில்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலில் பிரவேசித்த அவர் காலி மேயராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி மாவட்ட மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

லயனல் பிரேமசிறி 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் நுழைந்தார். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து 2007-2010 காலப்பகுதியில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சராக கடமையாற்றினார்.

கனடாவின் பிரதி உயர்ஸ்தானிகராகவும்
கனடாவின் பிரதி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மாநாடு கடந்த (16) ஆம் திகதி பிற்பகல் அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெற்றபோதே அவர் சஜித்துடன் இணைந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.