;
Athirady Tamil News

அனுராதபுரத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள்

0

அநுராதபுரம் பிரதேசத்திற்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு சிங்கள மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு அநுராதபுரத்தை(Anuradhapura) நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மத அனுஷ்டானங்கள்
பொசன் போயா வாரமானது செவ்வாய்க்கிழமை முதல் (18) எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அநுராதபுரத்தில் பௌத்த மத அனுஷ்டானங்களுடன் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, பொசன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 4,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.