;
Athirady Tamil News

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் வீரர்களை தாக்கிய சீனா.,வெளியான காணொளிகள்

0

ஜூன் 17ஆம் திகதி தென் சீனக் கடலில் நடந்த மோதலின் போது கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களால் சீனா தாக்குதல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ் ராணுவம் இது குறித்த காணொளிகளை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது.

அவற்றில், சீன கடலோர காவல்படையினர் கையில் ஆயுதங்களை ஏந்தியபடி பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்களை மிரட்டுவதும், பிலிப்பைன்ஸின் படகுகளை தாக்கியதும் பதிவாகியுள்ளது.

புதன்கிழமை, ​​பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரிகள், சீன கடலோர காவல்படை அதிகாரிகள் தங்கள் ரப்பர் படகில் சட்டவிரோதமாக ஏறி, அவர்களிடமிருந்த ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சீன அதிகாரிகள் கப்பலின் வெளிப்புற மோட்டார் மற்றும் Navigation கருவிகளை அழித்துள்ளனர். இது தவிர பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்களின் மொபைல் போன்களையும் பறித்துச் சென்றதாக கூறியுள்ளனர்.

சீன அதிகாரிகள் தங்கள் ரப்பர் படகை கூர்மையான ஆயுதங்களால் துளைத்ததாக பிலிப்பைன்ஸின் ஆயுதப்படை தளபதி அல்போன்சோ டோரஸ் கூறியுள்ளார்.

மேலும், பிலிப்பைன்ஸ் கடற்படையைச் சேர்ந்த ஒருவரின் கட்டைவிரலும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சீனக் கடலோரக் காவல்படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கொள்ளையடித்ததாகவும், சீனாவின் இந்த நடவடிக்கைகள் கடற்கொள்ளையர் போன்றது என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா புதிய கடல்சார் சட்டத்தை இயற்றியுள்ளது. இது கடந்த சனிக்கிழமை அமுல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், தென் சீனக் கடல் முழுவதையும் சீனா தனது பகுதியாகக் கோருகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற தெற்காசியாவின் பல நாடுகளும் உரிமை கோருகின்றன.

தென் சீனக் கடலில் நிலவும் சர்ச்சையைக் கருத்தில் கொண்டு சீனப் படகுகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவின் கப்பல்கள் இப்பகுதியில் இருப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.