;
Athirady Tamil News

யாழில் காவல்துறையினரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – குருநகரில் காவல்துறையினர் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (20) யாழ் பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொசன் போயா தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்
அத்துடன் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவரும், கஞ்சா கலந்த மாவாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மேலும், இதன்போது 19 சாராய கால் போத்தல்கள், 70 மில்லிகிராம் ஹெரோயின், 80 கிராம் கஞ்சா கலந்த மாவா என்பன கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.