;
Athirady Tamil News

சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு

0

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேட பொது மன்னிப்பு
இதனடிப்படையில், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 289 கைதிகளுக்கு இன்று (21) விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று (21) சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.