;
Athirady Tamil News

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாரிய பிரச்சனை… ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாதிப்பு!

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியர்களின் பற்றாக்குறையால், நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவரும், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்தியர் ருக்ஷான் பெல்லான இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நோயாளர் பராமரிப்பு சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் தாதியர் சேவைகள் இன்மை தொடர்பிலும், 10 ஆண்டுகளாக அந்தச் சேவைகளுக்கான பயிற்சி மற்றும் பதவி உயர்வுகள் இன்மையும் இந்த சேவைப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் குறைபாடுகள் காரணமாக வெளி வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக மாற்றப்பட்டு வெளியில் இருந்து சிகிச்சை பெற வரும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாரிய சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுமார் 400 செவிலியர்கள் மற்றும் சுமார் 500 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.