;
Athirady Tamil News

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி வயோதிப பெண் பலி: 14 பேர் படுகாயம்

0

மன்னாரில் (Mannar) ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது மன்னார்- முருங்கன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் நேற்று (21) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு குறித்த வாகனத்தில் வருகை தந்தவர்களின் வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வயோதிப பெண் பலி
இதனையடுத்து விபத்தில் காயமடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
இதேவேளை, வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.