;
Athirady Tamil News

பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் முதல் ஏஐ வேட்பாளர்

0

பிரித்தானியாவில் (United Kingdom) எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி , 59 வயதான ஸ்டீவ் எண்டகோர்ட் (Steve Endacourt) என்ற தொழிலதிபர் AI தொழில்நுட்பத்தின் மூலம் தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஸ்டீவ் எண்டாகாட் தன்னைப் பற்றிய AI உருவாக்கிய படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரித்தானிய தேர்தல் ஆணையம்
இந்த வேட்பாளர் AI ஸ்டீவ் என்று அழைக்கப்படுவதாக கூறப்படும் அதேவேளை, AI ஸ்டீவ் தேர்தலில் வெற்றி பெற்றால், AI அல்ல ஸ்டீவ் எண்டாகோட் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நாட்டு அரசாங்கம் பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு மேலும் AI வேட்பாளர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை உலகில் AI வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.