;
Athirady Tamil News

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கிய சீனாவின் நகரங்கள்..47 பேர் உயிரிழப்பு

0

சீனாவில் பெய்த கனமழையால் உண்டான வெள்ளத்தில் 47 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தில் கனமழை பெய்ததால், வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் Pingyuan கவுண்டியில் உள்ள 8 நகரங்கள் கடுமையாக சேதமடைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள் சேதமடைந்தன மற்றும் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

Meizhou நகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாவட்டம் ஒன்றில் 38 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக CCTV ஊடகம் தெரிவித்தது.

மேலும், Meizhouவின் வேறு இடங்களில் 9 பேர் பலியானதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.