;
Athirady Tamil News

ரூ.32 லட்சத்துக்கு நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை.., மாணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்

0

நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று மாணவர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் வினாத்தாள் விற்பனை
இந்தியா முழுவதும் கடந்த மாதம் 5 -ம் திகதி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில், ஒரு நாளிற்கு முன்னதாக 4 -ம் திகதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு விடுதிக்கு சுமார் 25 மாணவர்களை இடைத்தரகர்கள் அழைத்து வந்து, அவர்களிடம் நீட் தேர்வுக்கான வினாத்தாளை வழங்கி மனப்பாடம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

இதில், ஒரு மாணவர் சக நண்பருக்கு சமூக வலைத்தளம் வாயிலாக வினாத்தாளை அனுப்பியுள்ளார். அந்த மாணவர் அவரது சக நண்பர்களுக்கும் வினாத்தாளை அனுப்பியுள்ளார். இந்த தகவல் பாட்னா பொலிஸாருக்கு கிடைத்ததும் அன்று மதியமே விடுதிக்கு சென்றனர்.

அப்போது பொலிஸார் வருவதை பார்த்த இடைத்தரகர்கள் மாணவர்களிடம் இருந்து வினாத்தாளை பிடுங்கி தீயிட்டு கொளுத்தினர். பின்னர் அங்கிருந்து இடைத்தரகர்களும் மாணவர்களும் தப்பியோடிவிட்டனர்.

பின்னர், கடந்த மே 5-ம் திகதி பாட்னாவில் ஒரு காரில் சுற்றித் திரிந்த இடைத்தரகர்கள் சிக்கந்தர் யாதவ், அகிலேஷ் குமார், பிட்டு சிங் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

அதன்பிறகு சில மாணவர்களையும் பொலிஸார் கைது செய்தனர். அதில் ஒரு மாணவர் அனுராக் யாதவ் பொலிஸில் வாக்குமூலம் கொடுத்தார்.

அந்த மாணவர் கொடுத்த வாக்குமூலத்தில், “எனது உறவினர் சிக்கந்தர் யாதவ் (இடைத்தரகர்), பாட்னா அருகேயுள்ள தானாபூர் நகராட்சியில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அவர், நீட் தேர்வுக்கு முன்னதாக என்னிடம் வினாத்தாளை வழங்கி மனப்பாடம் செய்யுமாறு கூறினார்.

எனது உறவினர் சிக்கந்தர் யாதவும் அவரது நண்பர்களும் ஒரு வினாத்தாளை ரூ.32 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பல மாணவர்களுக்கு விற்பனை செய்தனர்” என்றார்.

இது தொடர்பாக பாட்னா பொலிஸார் கூறும்போது, “நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 19 பேரை கைது செய்துள்ளோம்” என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.