;
Athirady Tamil News

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் கோர விபத்து: பெண் பலி பலர் காயம்

0

பேருந்து ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த கை உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (22) சிலாபம் – புத்தளம் (Puttalam) பிரதான வீதி ஜயபிம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிலாபம் வைத்தியசாலையில் (chilaw hospita) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் பயணித்த லொறியுடன் மோதிய விபத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.