;
Athirady Tamil News

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரை மோசடியாக உரிம மாற்றம் செய்ய முற்பட்டவர் கைது

0

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவரின் சொகுசு காரினை மோசடியான முறையில் உரிம மாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது பெயரில் சொகுசு கார் ஒன்றினை கொள்வனவு செய்து , அதற்கு சாரதி ஒருவரையும் நியமித்துள்ளார்.

தற்போது அவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் , வாகனத்திற்கு, இந்த ஆண்டிற்கான வரி அனுமதி பத்திரம் , புகை பரிசோதனை செய்வதற்க்கு வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என கூறி வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணிடம் அவற்றை பெற்றுள்ளார்.

வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு , காரினை தனது பெயருக்கு மாற்றம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த விடயம் வாகன உரிமையாளருக்கு தெரிய வந்ததை அடுத்து , அவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் சாரதியை கைது செய்து , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்ற விசாரணைகளில் சந்தேகநபர் தன் மீதான குற்றச்சட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட வாகனம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் உரிமையாளரான பெண்ணிடம் மீள ஒப்படைக்க உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.