;
Athirady Tamil News

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிச்சைக்காரர் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0

பிச்சைக்காரர் ஒருவர் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

பணக்கார பிச்சைக்காரர்
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஷவுகத். பணக்கார பிச்சைக்காரரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார்.

தனது குழந்தைகளை நாட்டின் மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்துள்ளார். அவர்களுக்கு ரூ.1 கோடி அளவிற்கு காப்பீடும் எடுத்துள்ளார்.

1.7 மில்லியன்
2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வங்கி கணக்கில் 1.7 மில்லியன் பணம் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வரி வசூலிக்கும் நிறுவனமான ஃபெடரல் போர்டு ஆஃப் ரிவென்யூ (FBR) கூறியுள்ளது.

பிச்சையெடுப்பதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.1000 இவர் சம்பாதித்து விடுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இவர் தனிப்பட்ட ரீதியாக தனது நிதி நிலைமை குறித்து அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.