;
Athirady Tamil News

‘தில் இருந்தா வண்டிய விடுங்கடா’ – சாலையில் சாக்குப்பை விரித்து தூங்கிய போதை நபர்!

0

கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை நபர்
சேலம் மாவட்டம் எடப்பாடி – பூலாம்பட்டி சாலையில் கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி நடந்து சென்றார். பின்னர் திடீரென சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து படுத்துக் கொண்டார். மேலும், “தில் இருந்தா என் மீது வண்டியை விடுங்கடா பார்ப்போம்” என்று கூறியவாறு அவர் படுத்திருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்தவர்கள் அவரை அங்கிருந்து எழுந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அந்த நபர் யாரையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரமாக படுத்திருந்தார். இதனால் அந்த புகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரபரப்பு சம்பவம்
இதனையடுத்து வாலிபர்கள் சிலர் சாலையில் படுத்திருந்த போதை நபரை எழுப்பி கண்டித்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதே சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனல் மின் நிலைய ஊழியர் சங்கர் என்பவர் மதுபோதையில் படுத்திருந்துள்ளார்.

சங்கர்

அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று தலையில் ஏறி இறங்கியதில் சங்கர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் அடங்குவதற்குள் தற்போது மற்றொரு போதை நபர், அதேபோன்று சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.