;
Athirady Tamil News

யாழில். வீடுடைத்து நகைகள் கொள்ளை

0

யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 09 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் வீட்டார் , வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் , வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 09 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டார் வீடு திரும்பிய போதே , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது. அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.