;
Athirady Tamil News

நிலவில் உள்ள தூசிகளுடன் பூமியை வந்தடைந்த சீனாவின் Chang’e 6 – ஆய்வு பணிகள் ஆரம்பம்!

0

நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக சீனாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த Chang’e 6 என்ற விண்ணோடம் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பூமியை வந்தடைந்த Chang’e 6
விண்வெளியில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து, Chang’e 6 விண்கலம் பூமிக்குத் திரும்பியுள்ளது.

குறித்த விண்கலமானது சீனாவின் வடக்குப் பகுதியான இன்னர் மங்கோலியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

சீன விண்கலம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அதிகாலை 1:41 மணிக்கு சீன விஞ்ஞானிகள் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதுவே பூமிக்கு திரும்பிய முதல் சந்திரனின் தூர மாதிரிகள் ஆகும்.

சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் (CNSA) தலைவர் ஜாங் கேஜியன், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, Chang’e 6சந்திர ஆய்வுப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் Chang’e-6 ஆய்வு, சந்திரனின் தொலைதூரப் பக்கத்திலிருந்து 2 கிலோகிராம் நிலவு தூசி மற்றும் பாறைகளுடன் பூமிக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.